பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:17
புதுடில்லி:நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 45.37 கோடி டன்னாக குறைந்துஉள்ளது.இது, கடந்த 2011 - 12ம் நிதியாண்டின், இதே காலத்தில் கையாண்ட சரக்கை (46.70 கோடி டன்) விட, 2.86 சதவீதம் குறைவாகும் என, இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி:சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் சுணக்கம் கண்டுள்ளது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், சென்ற ஜனவரியுடன் நிறைவடைந்த, 10 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 23,968 கோடி டாலராக (13.18 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (25,193 கோடி டாலர்/13.85 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.86 சதவீதம் குறைவாகும்.இந்தியாவில், 12 முக்கிய துறைமுகங்களும், ஏராளமான சிறிய துறைமுகங்களும் உள்ளன. முக்கிய துறைமுகங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிறிய துறைமுகங்கள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
கோல்கட்டா:கணக்கீட்டு காலத்தில், ஆறு துறைமுகங்கள் அதிகமாகவும், ஆறு துறைமுகங்கள் குறைவாகவும், சரக்குகளை கையாண்டுள்ளன.கோல்கட்டாவில், டாக் சிஸ்டம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் என, இரண்டு துறைமுகங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், இவ்விரு துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 3.24 கோடி டன்னாக குறைந்துஉள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை (3.67 கோடி டன்) விட, 11.77 சதவீதம் குறைவாகும்.இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம் கையாண்ட சரக்கு, 6.07 சதவீதம் குறைந்து, 1.02 கோடி டன்னில் இருந்து, 96 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கோல்கட்டா ஹால்டியா காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 13.97 சதவீதம் சரிவடைந்து, 2.64 கோடி டன்னில் இருந்து, 2.27 கோடி டன்னாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு, 2.35 சதவீதம் உயர்ந்து, 4.55 கோடி டன்னில் இருந்து, 4.66 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
எண்ணூர் துறைமுகம்:தமிழகத்தில், சென்னை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார், எண்ணூர் என, மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதில், எண்ணூர் துறைமுகம், நிறுவன அளவில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 18.24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.20 கோடி டன்னில் இருந்து, 1.42 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கு, 5.84 சதவீதம் குறைந்து, 4.70 கோடி டன்னில் இருந்து, 4.43 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு, 2.81 சதவீதம் உயர்ந்து, 2.29 கோடி டன்னில் இருந்து, 2.35 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 1.05 சதவீதம் குறைந்து, 1.67 கோடி டன்னில் இருந்து, 1.65 கோடி டன்னாக குறைந்து உள்ளது.
நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 13.09 சதவீதம் உயர்ந்து, 2.69 கோடி டன்னில் இருந்து, 3.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 50.20 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.19 கோடி டன்னில் இருந்து, 1.59 கோடி டன்னாக குறைந்துள்ளது.
கண்ட்லா துறைமுகம் :மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கு, 7.47 சதவீதம் உயர்ந்து, 4.51 கோடி டன்னில் இருந்து, 4.85 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கு, 3.03 சதவீதம் குறைந்து, 5.54 கோடி டன்னில் இருந்து, 5.37 கோடி டன்னாக குறைந்துள்ளது. கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கு, 13.99 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6.85 கோடி டன்னில் இருந்து, 7.81 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|