மத்திய தொகுப்பு கோதுமை ஏற்றுமதிதனியாரையும் அனுமதிக்க அரசு திட்டம்மத்திய தொகுப்பு கோதுமை ஏற்றுமதிதனியாரையும் அனுமதிக்க அரசு திட்டம் ... பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது ...
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 45.37 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2013
00:17

புதுடில்லி:நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 45.37 கோடி டன்னாக குறைந்துஉள்ளது.இது, கடந்த 2011 - 12ம் நிதியாண்டின், இதே காலத்தில் கையாண்ட சரக்கை (46.70 கோடி டன்) விட, 2.86 சதவீதம் குறைவாகும் என, இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி:சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் சுணக்கம் கண்டுள்ளது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், சென்ற ஜனவரியுடன் நிறைவடைந்த, 10 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 23,968 கோடி டாலராக (13.18 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (25,193 கோடி டாலர்/13.85 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.86 சதவீதம் குறைவாகும்.இந்தியாவில், 12 முக்கிய துறைமுகங்களும், ஏராளமான சிறிய துறைமுகங்களும் உள்ளன. முக்கிய துறைமுகங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிறிய துறைமுகங்கள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
கோல்கட்டா:கணக்கீட்டு காலத்தில், ஆறு துறைமுகங்கள் அதிகமாகவும், ஆறு துறைமுகங்கள் குறைவாகவும், சரக்குகளை கையாண்டுள்ளன.கோல்கட்டாவில், டாக் சிஸ்டம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் என, இரண்டு துறைமுகங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், இவ்விரு துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 3.24 கோடி டன்னாக குறைந்துஉள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை (3.67 கோடி டன்) விட, 11.77 சதவீதம் குறைவாகும்.இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம் கையாண்ட சரக்கு, 6.07 சதவீதம் குறைந்து, 1.02 கோடி டன்னில் இருந்து, 96 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கோல்கட்டா ஹால்டியா காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 13.97 சதவீதம் சரிவடைந்து, 2.64 கோடி டன்னில் இருந்து, 2.27 கோடி டன்னாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு, 2.35 சதவீதம் உயர்ந்து, 4.55 கோடி டன்னில் இருந்து, 4.66 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
எண்ணூர் துறைமுகம்:தமிழகத்தில், சென்னை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார், எண்ணூர் என, மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதில், எண்ணூர் துறைமுகம், நிறுவன அளவில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 18.24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.20 கோடி டன்னில் இருந்து, 1.42 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கு, 5.84 சதவீதம் குறைந்து, 4.70 கோடி டன்னில் இருந்து, 4.43 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு, 2.81 சதவீதம் உயர்ந்து, 2.29 கோடி டன்னில் இருந்து, 2.35 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 1.05 சதவீதம் குறைந்து, 1.67 கோடி டன்னில் இருந்து, 1.65 கோடி டன்னாக குறைந்து உள்ளது.
நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 13.09 சதவீதம் உயர்ந்து, 2.69 கோடி டன்னில் இருந்து, 3.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 50.20 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.19 கோடி டன்னில் இருந்து, 1.59 கோடி டன்னாக குறைந்துள்ளது.
கண்ட்லா துறைமுகம் :மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கு, 7.47 சதவீதம் உயர்ந்து, 4.51 கோடி டன்னில் இருந்து, 4.85 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கு, 3.03 சதவீதம் குறைந்து, 5.54 கோடி டன்னில் இருந்து, 5.37 கோடி டன்னாக குறைந்துள்ளது. கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கு, 13.99 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6.85 கோடி டன்னில் இருந்து, 7.81 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)