பதிவு செய்த நாள்
17 பிப்2013
00:38
புதுடில்லி:மத்திய அரசின், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) அதிகரிப்பால், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பளவு, விறுவிறுவென உயர்ந்துள்ளது.மகாராஷ்டிரா :இதன்படி, நடப்பு 2012-13ம் பருவத்தில், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட, பல மாநிலங்களில், கொண்டைக் கடலை பயிரிடும் பரப்பளவு, 94.99 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, சென்ற பருவத்தை காட்டிலும், 5 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும்.
தேவையை பூர்த்தி செய்ய, நம்நாடு, பருப்பு வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, விவசாயிகளை ஊக்குவித்து, பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, ஒரு குவிண்டால், கொண்டைக்கடலை மற்றும் உளுந்து ஆகியவற்றிற்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை, 14 சதவீதம் உயர்த்தி, 3,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்:இதையடுத்து, நடப்பு பருவத்தில், பருப்பு வகைகள் பயிரிடும்
பரப்பளவு, 147.46 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 150.82 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பாசிப் பருப்பு பயிரிடும் பரப்பளவு, 6.71 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த பருவத்தில், 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்து காணப்பட்டது.ரபி பருவ விதைப்பு பணிகள் முடிவடைய உள்ள நிலையில், மக்காச்சோளம், பார்லி உள்ளிட்ட முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பளவு, 60.08 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 63.27 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண் டுள்ளது.
இதன்படி, மக்காச்சோளம் பயிரிடும் பரப்பளவு, 13.45 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 15.33
லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில், இதன் பரப்பளவு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. அதேசமயம், நெல் பயிரிடும் பரப்பளவு, கடந்த பருவத்தை காட்டிலும், நடப்பு பருவத்தில், 2.79 லட்சம் ஹெக்டேர் குறைந்து, 27.07 லட்சம் ஹெக்டேரில்இருந்து, 24.28 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.
நெல் சாகுபடி பரப்பு:ஆந்திரா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால், நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாக சரிவடைந்து உள்ளது. இதன் காரணமாகவே, ஒட்டு மொத்த அளவில், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்து போயுள்ளது.இதே போன்று, கோதுமை பயிரிடும் பரப்பளவும், 298.61 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 298.38 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 86.51 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 88.24 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இருப்பினும், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, கடந்த பருவத்தை காட்டிலும், நடப்பு பருவத்தில், 1.04 லட்சம் ஹெக்டேர் குறைந்து, 9.02 லட்சம் ஹெக்டேராக சரிவைக் கண்டுள்ளது.தானிய உற்பத்தி:அதேசமயம், வெள்ளை கடுகு பயிரிடும் பரப்பளவு, 1.41 லட்சம் ஹெக்டேர் உயர்ந்து, 67.26 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என, வேளாண் அமைச்சகம் வெளியிட்டுஉள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம், மத்திய அரசு, நடப்பாண்டில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 25 கோடி டன்னை தாண்டும் என்ற மதிப்பீட்டை வெளியிட்டுஇருந்தது. எனினும், இது, கடந்த ஆண்டின் உற்பத்தியை (26 கோடி டன்) விட, 3.6 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|