பதிவு செய்த நாள்
17 பிப்2013
11:48
ராமநாதபுரம் :மீன்பாடு குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன், கருவாடு விலை உச்சத்தை எட்டி வருகிறது. இதனால், அசைவ பிரியர்களின் "ருசி'க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், கீழக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள், இயற்கை இடர்பாடுகளாலும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடர்பாடுகளைம் மீறி, கடலுக்கு சென்றாலும், மீன்பாடு இன்றி வெறுங்கையுடன் திரும்ப வேண்டியுள்ளது.இதனால், கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும், மீன் வாங்க வருவதில்லை. குறைந்த அளவே மீன்பாடு உள்ள நிலையில், மீன், கருவாடு விலை, அசைவ பிரியவர்களின் "ருசி'க்கு எட்டா தூரத்தில் இருந்து வருகிறது.
மீன்: ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் 380 ரூபாய்க்கு விற்ற சீலா நேற்று 400 க்கும், 235க்கு விற்ற ஊளா 240க்கும், 150க்கு விற்ற வில மீன் 155க்கும், 140க்கு விற்ற கிழங்கான் 145க்கும், 120க்கு விற்ற வால மீன் 125க்கும், 180க்கு விற்ற இறால் 200க்கும், 180க்கு விற்ற ஆக்டோபஸ் (கனவா) 200க்கும், 140க்கு விற்ற நகர 145க்கும், 180க்கு விற்ற பாறை 220க்கும், 50க்கு விற்ற தொண்டன் 60க்கும், 40க்கு விற்ற காரல் 60க்கும், 30க்கு விற்ற சூடை 40க்கும் விற்றது.
கருவாடு: 380க்கு விற்ற நெய் மீன் (சீலா) 400க்கும், ரூ.100க்கு விற்ற நகர, குமுலா 150க்கும், 80க்கு விற்ற வாலகருவாடு 100க்கும், 80க்கு விற்ற ஊளி 120,க்கும், 100க்கு விற்ற திருக்கை 160க்கும், 50க்கு விற்ற தொண்டன் 100க்கும், 50க்கு விற்ற காரல், சூடை 80க்கும் விற்கப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|