பதிவு செய்த நாள்
17 பிப்2013
14:35
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் ஒரே வாரத்தில், குவிண்டால் வத்தல் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தைக்கு செங்குடி, பூலாங்குடி, சேத்திடல், சீனாங்குடி, சாத்தனூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நேற்று, ஆயிரத்து 200 குவிண்டால்(ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.கடந்த வாரம் குவிண்டால் 9,500க்கு விற்கப்பட்ட வத்தல், நேற்றைய சந்தையில் 7,500க்கே விலை போனது. நல்ல விலை கிடைக்கும் என, எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் பாலமுருகன், பிரபு கூறுகையில், ""மிளகாய் காய வைக்க கிட்டங்கி, உலர் களம் வசதி இல்லை. மேலும், வத்தல் வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் "சிண்டிகேட்' அமைத்து, விலையை குறைத்து விட்டனர்,'' என்றனர்.வெளியூர் வியாபாரி முருகன் கூறுகையில், ""சில நாட்களாக பெய்த மழையில் நனைந்து, காரம் குறைந்த மிளகாய் அதிகளவில் கொண்டு வரப்பட்டன. இதனால், விலையை குறைத்து மதிப்பிட வேண்டி இருந்தது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|