பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:32
புதுடில்லி:வரும் பட்ஜெட்டில், இரண்டாம் ரக இரும்புத் தாது ஏற்றுமதி மீதான வரியை, 50 சதவீதம் குறைக்கவேண்டும் என, மத்திய கனிம வளத் துறை அமைச்சர் தீன்ஷா படேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தற்போது, இரும்புத் தாது கட்டிகள் மற்றும் இரண்டாம் ரக இரும்புத் தாது துகள்களுக்கும், சரி சமமாக, 30 சதவீதம், ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இரும்புத் துகள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, அதன் மீதான வரியை, 15 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி, கடந்த 2009 - 10ம் நிதியாண்டில், 12 கோடி டன்னாக இருந்தது. இது, சென்ற 2011 - 12ம் நிதியாண்டில், 6 கோடி டன்னாகக் குறைந்தது.
நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், சென்ற செப்டம்பர் முதல், நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், இரும்புத் தாது ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 62 சதவீதம் குறைந்து, 1.50 கோடி டன்னாக சுருங்கிவிட்டது.
நாட்டின் மொத்த இரும்புத் தாது ஏற்றுமதியில், இரண்டாம் ரகமான, இரும்புத் தாது துகள்களின் பங்களிப்பு, 92 சதவீதமாக உள்ளது.இந்நிலையில், சுங்க வரியை குறைப்பதன் மூலம், சரிந்து வரும் இரும்புத் தாது துகள் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என, மத்திய கனிம வள அமைச்சகம் யோசனை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|