அதிக வரத்தால் வெங்காயம் விலை சரிவடைகிறதுஅதிக வரத்தால் வெங்காயம் விலை சரிவடைகிறது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு ...
மீன் விலை: 30 சதவீதம் வரை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
13:58

சென்னை: சென்னையில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அசைவ பிரியர்களின் விருப்பத்தில் மீன் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. இறைச்சியை விட மீன் வகைகளின் விலை குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
வஞ்சிரம் 600 ரூபாய்: கடந்த, 10 நாட்களாக மீன் விலை, எப்போதுமில்லாத வகையில் வெகுவாக அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த வஞ்சிரம், 550 முதல், 600 ரூபாயும், 300 முதல், 320 ரூபாய் வரை விற்கப்பட்ட, நடுத்தர வஞ்சிரம், 380 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதித் தரம் வாய்ந்த, கிலோ, 1,200 ரூபாயக்கு விற்ற இறால், 1,300 ரூபாய் வரை விற்கிறது. 200 ரூபாய் வரை விற்கப்பட்ட, சிறிய வகை இறால், 250 ரூபாய் வரை விலை போகிறது.கிலோ, 160 முதல், 180 ரூபாய் வரை விற்ற சீலா மீன், சங்கரா வகை மீன்கள், 230 முதல், 250 ரூபாய் என, விலை அதிகரித்து உள்ளது. கிலோ, 200 ரூபாய்க்கு விற்ற, கொடுவா மீன், 250 ரூபாயாகவும், 160 ரூபாய்க்கு விற்ற சுறா மீன், 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மத்தி மீன்கள் எனப்படும், துக்கடா மீன்களின் விலை, கிலோ, 40ல் இருந்து, 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்தின்போது, உயரும் அளவுக்கு மீன் வகைகள் தற்போது உயர்ந்துள்ளன.
விலையேற்றம் ஏன்? இது குறித்து, மீனவர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மீன்பிடி தொழில் முடங்கியது. இதனால், வெளிஇடங்களில் இருந்து சென்னைக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு மீன் வரத்து குறைந்து உள்ளது. இதுதவிர, சென்னை மக்களின் மீன் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கியமாக விளங்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதுதான், விலை ஏற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
சிக்கல் என்ன? காசிமேடு மீன்பிடி துறைமுக வர்த்தகர் கஜேந்திரன் கூறியதாவது: சமீப காலமாக, கடலில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் மீன்கள், மிதமான வெப்பமுள்ள ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிட்டன. டீசல் விலை ஏற்றம் காரணமாக, செலவு அதிகரித்துள்ளதால், விசைப்படகில் நீண்ட தூரம் சென்று மீன்பிடிப்பதும் குறைந்துவிட்டது. காசிமேட்டில் இருந்து, மாதத்திற்கு நான்கு முறை கடலுக்குச் சென்ற விசைப்படகுகள், தற்போது இரண்டு முறைதான் செல்கின்றன. எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், வரத்து குறைந்து, எதிர்பாராத அளவில் மீன்களின் விலை எகிறியுள்ளது. இப்போதைக்கு மீன் விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி: கடந்த, 10 நாட்களில், 30 சதவீதம் வரை மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது, அசைவ பிரியர்களை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது. இதனால், கிலோ, 160 ரூபாய்க்கு கிடைக்கும், கோழி இறைச்சி பக்கம், அவர்கள் திரும்பி உள்ளனர். தற்போது விலை எகிறயுள்ள நிலையில், ஏப்., 14 முதல், மீன்களின் இன விருத்தியை கருத்தில் கொண்டு, 45 நாட்கள் மீன்பிடி தடை வருவதால், விலை இப்போதைக்கு குறையாது என்றே தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)