நாட்டின் சர்க்கரை உற்பத்தி166 லட்சம் டன்னாக வளர்ச்சிநாட்டின் சர்க்கரை உற்பத்தி166 லட்சம் டன்னாக வளர்ச்சி ... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.69 லட்சம் கோடியாக உயர்வு ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.69 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.30,840 கோடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
01:22

மும்பை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், பங்குச் சந்தைகளில், பட்டியலிடப்பட்டுள்ள, 40 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 50 சதவீதம் அல்லது 30,840 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலத்தில், பட்டியலிடப்பட்ட வங்கிகளின், நிகர வசூலாகாத கடன், 92,398 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வரையிலான காலத்தில் 61,558 கோடி ரூபாயாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், நிகர வசூலாகாத கடன், 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் முறையே, 70 சதவீதம் மற்றும் 118 சதவீதம் என்ற அளவில் உள்ளன.

மேற்கண்ட, 40 வங்கிகளின் வசூலாகாத கடனில், இம்மூன்று வங்கிகளின் பங்களிப்பு, 47 சதவீதம் (14,500 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள, நடப்பு முழு நிதியாண்டில், வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நிதியாண்டில், கடனுக்கான வட்டி விகிதம் குறையும் பட்சத்தில், வங்கிகளின் வசூலாகாத கடனும் குறையும் என, கருதப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)