பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:22
மும்பை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், பங்குச் சந்தைகளில், பட்டியலிடப்பட்டுள்ள, 40 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 50 சதவீதம் அல்லது 30,840 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலத்தில், பட்டியலிடப்பட்ட வங்கிகளின், நிகர வசூலாகாத கடன், 92,398 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வரையிலான காலத்தில் 61,558 கோடி ரூபாயாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், நிகர வசூலாகாத கடன், 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் முறையே, 70 சதவீதம் மற்றும் 118 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
மேற்கண்ட, 40 வங்கிகளின் வசூலாகாத கடனில், இம்மூன்று வங்கிகளின் பங்களிப்பு, 47 சதவீதம் (14,500 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள, நடப்பு முழு நிதியாண்டில், வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நிதியாண்டில், கடனுக்கான வட்டி விகிதம் குறையும் பட்சத்தில், வங்கிகளின் வசூலாகாத கடனும் குறையும் என, கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|