பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:27
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில் பொறியியல், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 32.93 புள்ளிகள் அதிகரித்து, 19,501.08 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 19,554.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,462.92 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலிவர், எல் அண்டு டி உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஜிந்தால் ஸ்டீல், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி,' 10.80 புள்ளிகள் உயர்ந்து, 5,898.20 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,911 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,878.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|