பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:00
மும்பை:இந்திய மருத்துவத் துறையின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) செலவினம், நடப்பாண்டில், 5,700 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் மருத்துவத் துறைகள் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றன.
இதையடுத்து, இத்துறைகளில், மென்பொருட்கள் மற்றும் தகவல் ஒருங்கிணைப்பு தொலைத்தொடர்பிற்கான ஐ.டி., செலவினம் உயர்ந்து வருகிறது.இவ்வகையில், கடந்த 2012ம் ஆண்டில், இத்துறைகளின் ஐ.டி., செலவினம், 5,300 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு 2013ம் ஆண்டில், 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,700 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளின், தொலைத்தொடர்பு சேவைக்கான செலவினம், 3.9 சதவீதம் உயர்ந்து, 1,660 கோடியிலிருந்து, 1,720 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்துறைகளின், செயல்முறை நிர்வாகம் மற்றும் ஆலோசனைகளுக்கான செலவினம், 9.7 சதவீதம் அதிகரித்து, 1,320 கோடியிலிருந்து, 1,450 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.இது தவிர, ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில், பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான செலவினமும், 18 சதவீதம் உயரும் என, கார்ட்னர் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|