பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:02
சென்னை:இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, வரும் 2015ம் ஆண்டிற்குள், 1.91 லட்சம் கோடி ரூபாயாக (2,300 கோடி பவுண்டு) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி மைக் நிதாவிரியானகிஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான, வர்த்தகம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.35 லட்சம் கோடி ரூபாயாக (1,680 கோடி பவுண்டு) அதிகரித்துள்ளது.இதனை, வரும், 2015ம் ஆண்டிற்குள், 2,300 கோடி பவுண்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவிலிருந்து, ஜவுளி, எரிபொருள்,
நவரத்தினங்கள், ஆபரணங்கள், ஆடைகள், இரும்புத் தாது மற்றும் இயந்திரங்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விமானம், விண்கலம், உரம் உள்ளிட்ட வற்றை, இங்கிலாந்திலிருந்து, நம்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தியாவின், 7வது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இங்கிலாந்து விளங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|