பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:04
புதுடில்லி:பரஸ்பர நிதி நிறுவனங்களின் மாதாந்திர வருவாய் திட்டங்களில் (எம்.ஐ.பி.,), முதலீடு குறைந்து வருகிறது. இதனால், இந்நிறுவனங்கள், எம்.ஐ.பி., திட்டங்களில் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.நீண்டகால முதலீடுபரஸ்பர நிதி நிறுவனங்கள், நீண்ட கால முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், எம்.ஐ.பி., திட்டங்களை வெளியிடுகின்றன. ஒரு சில திட்டங்களின் கீழ் திரட்டப்படும் நிதியில், 80 சதவீதம் கடன் பத்திரங்களிலும், 20 சதவீதம் பங்குகளிலும் முதலீடு செய்யப்படுகின்றன.
இத்திட்டங்களில், நீண்ட கால அடிப்படையில் வருவாய் வளர்ச்சி மிதமான அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள், எம்.ஐ.பி., திட்டங்களின் கீழ், திரட்டப்படும் நிதியில், 35-40 சதவீதத்தை பங்குகளிலும், எஞ்சியதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.இந்நிலையில், சென்ற 2012ம் ஆண்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக, பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய எம்.ஐ.பி., திட்டங்கள், சராசரியாக, 13 சதவீத வருவாயை தந்துள்ளன. இது, முந்தைய 2011ம் ஆண்டில், 1.56
சதவீதமாகவும், 2010ம் ஆண்டில், 7.5 சதவீதம் என்ற அளவிலும் மிகவும் குறைந்து காணப்பட்டது.அதிக வருவா#2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், எம்.ஐ.பி., திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, குறைந்த வருவாய் ஈட்டிய முதலீட்டாளர்கள், சென்ற 2012ம் ஆண்டு, பங்குச் சந்தையின் ஏற்றத்தால், அதிக வருவாய் ஈட்டியுள்ளனர்.
இவர்கள், இந்த சாதகமான தருணத்தை, சரியாக பயன்படுத்திக் கொண்டு, எம்.ஐ.பி., திட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனால், சென்ற 2012ம் ஆண்டு, எம்.ஐ.பி., திட்டங்கள் அதிக வருவாய் அளித்த போதிலும், அத்திட்டங்களின் கீழ், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 26 சதவீதம் சரிவடைந்து, 9,691 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2011ம் ஆண்டு, 13,173 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.இதை விட, 2010ம் ஆண்டு, 21,852 கோடி ரூபாய் என்ற
அளவிற்கு அதிகரித்திருந்தது.இந்த வகையில், சென்ற ஆண்டு, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்த, 59 எம்.ஐ.பி., திட்டங்களில், 44 திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு சரிவடைந்துள்ளது.பெரும்பாலான திட்டங்களில், சொத்து மதிப்பு, 30-40 சதவீதம் வரை குறைந்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் எம்.ஐ.பி., திட்டத்தின் சொத்து மதிப்பு, 35 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.கடன் பத்திரங்கள்அதே சமயம் சென்ற ஆண்டு, பங்கு முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், 25 சதவீதத்திற்கு மேற்பட்ட வருவாயை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தந்து உள்ளன. கடன் பத்திர முதலீடுகள் மீதான வருவாயும், 9 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
குறுகிய மற்றும் நீண்ட கால, "கில்டு பண்டு' திட்டங்கள், சராசரியாக 10.5 சதவீதமும், "இன்கம் பண்டு' திட்டங்கள், 9.8 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளன.
இத்தகைய போக்கால், எம்.ஐ.பி., திட்டங்களில் இருந்து வெளியேறி, மேற்கண்ட திட்டங்களில் முதலீடு செய்யுமாறு, பரஸ்பர நிதி முகவர்கள், முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக கூறப்படுகிறது.
நிர்வாக செலவு:மேலும், எம்.ஐ.பி., திட்டங்களில், 2 சதவீத அளவிற்கு நிர்வாகச் செலவு ஏற்படுகிறது. அதேசமயம், குறுகிய மற்றும் நீண்ட கால "இன்கம் பண்டு' திட்டங்களுக்கான நிர்வாக செலவினம், முறையே 0.5-1 சதவீதம் மற்றும் 1.1-1.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாகவும், எம்.ஐ.பி., திட்டங்களை விடுத்து, வேறு முதலீடுகளை, முதலீட்டாளர்கள் நாடுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|