பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:08
புதுடில்லி:நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான அலைபேசி சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4 கோடி அதிகரித்து, 65.75 கோடியாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தை விட, 0.06 சதவீதம் அதிகம் என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
உள்நாட்டில், அலைபேசி சேவை வழங்குவதில், பார்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.சென்ற ஜனவரி மாதம், பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிதாக, 22.90 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.41 கோடியாக அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வோடபோன் நிறுவனம், 2.20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த
வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14.77 கோடி என்ற அளவில் உள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 24.50 லட்சம் உயர்ந்து, 11.64 கோடியாக அதிகரித்துள்ளது.அதேசமயம், ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை, 17.80 லட்சம் குறைந்து, 6.15 கோடியாக குறைந்து உள்ளது. யூனிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14 லட்சம் குறைந்து, 4.01 கோடியாக குறைந்துள்ளது.வீடியோகான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 13.80 லட்சம் சரிவடைந்து, 22.60 லட்Œம் என்ற அளவில் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|