பதிவு செய்த நாள்
23 பிப்2013
00:56
புதுடில்லி:மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், பொதுத் துறை வங்கிகளின், வசூலாகாத கடன் அளவு குறைய தொடங்கியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தெரிவித்தார்.கடந்த, 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வசூலாகாத கடனில் இருந்து, பொதுத் துறை வங்கிகள், 9,726 கோடி ரூபாயை திரும்ப பெற்றன.
வட்டி விகிதம்:இது, 2011ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 13,940 கோடி ரூபாயாகவும், 2012ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 17,043 கோடி ரூபாயாகவும், இதே ஆண்டு, செப்டம்பர் மாதம் வரையிலுமாக, 10,815 கோடி ரூபாயாகவும் இருந்தது என, நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வட்டி விகிதம் அதிகமாக இருந்ததாலும், நாட்டின், தொழிற்துறை உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டதாலும், பொதுத் துறை வங்கிகளின், வசூலாகாத கடன் அளவு அதிகரித்தது.இதையடுத்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொழில் துறை உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டன.மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வசூலாகாத கடனை, திறம்பட வசூலிக்கும் வகையில், கொள்கை திட்டங்களை அறிவித்தது.முகமை அதிகாரிகள்மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளின், வசூலாகாத கடனை திரும்ப பெறும் வகையில், முகமை அதிகாரிகளை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்ற டிசம்பர் வரையிலுமாக, பொதுத் துறை வங்கிகளின், வசூலாகாத கடன், 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 1.37 லட்சம் கோடி ரூபாயாக காணப்பட்டது. ஆக, கணக்கீட்டு காலத்தில், இவ்வங்கிகளின் வசூலாகாத கடன், 47,090 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.@வளாண் துறைசென்ற, டிசம்பர் மாதம் வரையிலுமாக, வங்கிகளின் மொத்த கடனில், நிறுவனங்கள் பிரிவிலான, வசூலாகாத கடன், 98,884 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 68,221 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடனில், வசூலாகாத கடன், 24,827 கோடியிலிருந்து, 30,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|