பதிவு செய்த நாள்
23 பிப்2013
00:59
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் மொத்த இலக்கில், 74.41 சதவீதம் என, மத்திய நிதி இணை அமைச்சர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பார்லிமென்டில் தெரிவித்தார்.ஒட்டு மொத்த மறைமுக வரி வசூலில், உற்பத்தி வரி வாயிலாக, 1,38,654 கோடி ரூபாயும், சுங்கம் மற்றும் சேவை வரிகள் வாயிலாக முறையே, 1,34,802 கோடி மற்றும் 1,02,322 கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன.
நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 5.05 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 2011-12ம் நிதியாண்டை விட, 27 சதவீதம் அதிகமாகும்.இதில், சுங்க வரி வாயிலாக, 1.87 லட்சம் கோடி ரூபாயும், உற்பத்தி வரி மூலம், 1.93 லட்சம் கோடி ரூபாயும், சேவை வரி வாயிலாக, 1.24 லட்சம் கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், மறைமுக வரி வசூல், 16.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.92 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|