பதிவு செய்த நாள்
23 பிப்2013
01:00
மும்பை:வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், நடப்பு பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரையிலுமாக, 16.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49.91 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 43.01 லட்Œம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 8ம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து, வங்கிகள் திரட்டிய டெபாசிட், 43,754 கோடி ரூபாய் அதிகரித்து, ஒட்டு மொத்த அளவில், 65.70 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், வங்கிகள் வழங்கிய மொத்த கடன், 48,677 கோடி அதிகரித்து, 51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், பணவீக்கம் அதிகரித்து காணப்படுவதால், முதலீட்டாளர்கள் வங்கிகளில் டெபாசிட் மேற்கொள்வதை தவிர்த்து, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து, அண்மைக் காலமாக, வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி விகிதத்தை விட, அவை திரட்டும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, நிர்ணயித்துள்ள டெபாசிட் வளர்ச்சி இலக்கான, 15 சதவீதத்தை எட்டுவது சவாலாக இருக்கும் என, வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|