மருந்து பொருட்கள் ஏற்றுமதிரூ.1.37 லட்சம் கோடியாக உயரும்மருந்து பொருட்கள் ஏற்றுமதிரூ.1.37 லட்சம் கோடியாக உயரும் ... சகாரா குழுமத்தில் முதலீடு: "செபி' எச்சரிக்கை சகாரா குழுமத்தில் முதலீடு: "செபி' எச்சரிக்கை ...
வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: மத்திய அரசு:விலை குறைந்து வருவதால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
01:03

புதுடில்லி:வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்க, திட்டம் எதுவும் இல்லை என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர், பார்லிமென்டில் தெரிவித்தார்.
கர்நாடகா:காலம் தவறிய மழைப் பொழிவால், வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு குறைந்ததுடன், இதன் வரத்தும், சரிவடைந்து போனது.இதனால், கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலுமாக, வெங்காயத்தின் விலை, தொடர்ந்து உயர்ந்து வந்தது.

குறிப்பாக, நடப்பு மாதத்தின் தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 25 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.இந்நிலையில், தற்போது, சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளதுடன், மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 16 ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இதே போன்று, டில்லியிலும் இதன் விலை, 25 ரூபாயிலிருந்து, 17.50 ரூபாயாக குறைந்துள்ளது.எனவே, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என, அமைச்சர் மேலும் கூறினார்.உற்பத்தி குறைந்து போனதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் வரை, வெங்காய வரத்து மிகவும் குறைந்து போயிருந்தது.இதனால், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் வெங்காய ஏற்றுமதி, 83,044 டன்னாக மிகவும் சரிவடைந்திருந்தது.

இது, கடந்த, 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.47 லட்சம் டன்) விட, 40 சதவீதம் குறைவாகும்.சாகுபடி பரப்பு:காலம் தவறிய மழைப் பொழிவால், நாட்டின் வெங்காய சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தில், 10 சதவீதம் குறைந்து, 10.87 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.இருப்பினும், நடப்பு பருவத்தில், வெங்காயம் உற்பத்தி, கடந்த ஆண்டு உற்பத்தி அளவான, 1.74 கோடி டன்னாக இருக்குமென, நாசிக்கில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)