வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: மத்திய அரசு:விலை குறைந்து வருவதால்...வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: மத்திய அரசு:விலை குறைந்து வருவதால்... ... இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் சரிவு இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் சரிவு ...
சகாரா குழுமத்தில் முதலீடு: "செபி' எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
01:04

புதுடில்லி:சகாரா குழுமத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய இரண்டு நிறுவனங்களுடன், முதலீட்டாளர்கள் எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என, "செபி' அமைப்பு எச்சரித்துள்ளது.

முறைகேடு:சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், முறைகேடாக முதலீடுகளை திரட்டிய வழக்கில், 24 ஆயிரம் கோடி ரூபாயை, முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், அதன்படி நடக்காததால், சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்கள், சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மற்றும் மூன்று இயக்குனர்கள், ஆகியோரின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள், இதர முதலீடுகள் ஆகியவற்றை முடக்க, "செபி'க்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.

இதன்படி, சம்பந்தப்பட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்டவற்றை "செபி' முடக்கியுள்ளது.இதை தொடர்ந்து "செபி' வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்கள் மற்றும் நான்கு நபர்களுடன் மேற்கொள்ளும் எந்தவொரு பரிவர்த்தனையும், அது அவர்கள் சொந்த பொறுப்பில் செய்து கொள்வதாகும்.எந்தவொரு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முன், முதலீட்டாளர்களும், பொதுமக்களும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள், டீமேட், வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக "செபி' பிறப்பித்த உத்தரவை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள்:இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் பொறுப்பை "செபி' மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு, 85 சதவீதத் தொகை வழங்கப் பட்டுள்ளதாகவும், மேலும், "செபி'யிடம் ஏற்கனவே, 5,120 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தாகவும், சகாரா குழுமம் தெரிவித்துள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டியதை விட, அதிகம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)