பதிவு செய்த நாள்
23 பிப்2013
08:54
புதுடில்லி: புதிய வங்கிகள் துவங்குவதற்கான, விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது: பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் , வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மற்றும் குழுக்கள் புதிய வங்கிகள் துவங்க தகுதி உடையவை. இருப்பினும், புதிய வங்கிகள் துவங்குவதற்கு, 10 ஆண்டுகள் வணிக அனுபவம் இருக்க வேண்டும். வங்கி துவங்குவதற்கு, குறைந்த பட்ச மூலதனம், 500 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதில், 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும். வங்கிகள் வசதியே இல்லாத கிராமங்களில், 25 சதவீத வங்கி கிளைகளை அமைக்க வேண்டியது கட்டாயம். புதிய வங்கிகளுக்கான உரிமம் பெற விண்ணப்பங்களை, ஜூலை, 1ம் தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,"" தனியார் துறையினர், புதிய வங்கிகள் துவங்குவதற்கு, 2013 - 14 நிதியாண்டின் இறுதிக்குள் ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கும் என எதிர்ப்பார்க்கிறேன்,'' என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|