பதிவு செய்த நாள்
24 பிப்2013
00:31
புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான வரியை உயர்த்த திட்டமில்லை என, மத்திய நிதி துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பார்லிமென்டில் தெரிவித்தார்.சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான வரியை உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளன.
ஆனால், உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி, இறக்குமதி விலை மற்றும் சர்வதேச சர்க்கரை விலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்ததில், சர்க்கரை இறக்குமதி வரியை உயர்த்த அவசியமில்லை என, அரசு தீர்மானித்துள்ளது.தற்போது, இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது, 10 சதவீத சுங்கவரி விதிக்கப்படுகிறது. எனவே, இந்த வரி விகிதத்தை மேலும் உயர்த்தும் திட்டமில்லை என, அமைச்சர் தெரிவித்தார்.
உலகளவில், சர்க்கரை உற்பத்தியில், பிரேசிலுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை
உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த பருவத்தில், 2.60 கோடி டன்னாக இருந்தது.கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி குறையும் என்றாலும், உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை, 2.20 கோடி டன் என்ற அளவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|