பதிவு செய்த நாள்
25 பிப்2013
00:52
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கு எட்டப்படும் என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 330 கோடி டாலர் (18,150 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 270 கோடி டாலர் (14,850 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, இதன் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கு எட்டப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தை விட, 22 சதவீதம் வளர்ச்சிகண்டு, 230 கோடி டாலராக (12,650 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
உள்நாட்டில், மொராதாபாத், ஜெய்ப்பூர், ஷரன்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களில், கைவினைப் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், கைவினைப் பொருட்கள் துறையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|