பதிவு செய்த நாள்
26 பிப்2013
09:07
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் (09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15.98 புள்ளிகள் குறைந்து 19315.71 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.10 புள்ளிகள் குறைந்து 5842.65 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று மந்தமாகவே காணப்பட்டது. ரயில்வே பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் மத்திய பட்ஜெட் போன்ற எதிர்பார்ப்புகளால், முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.இருப்பினும், பொதுத் துறை நிறுவனங்கள், எண்ணெய், எரிவாயு, பொறியியல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|