பதிவு செய்த நாள்
26 பிப்2013
10:14
புதுடில்லி : இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட டெபாசிட்டுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான,அறிவிப்பு, நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், நடப்பாண்டிற்கான இ.பி.எப்., முதலீட்டுக்கு, 8.5 சதவீதம் வட்டி அளிக்கும்படி, நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி பரிந்துரைத்த குறிப்பாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதன் மூலம், இ.பி.எப்., கணக்கு வைத்துள்ள, ஐந்து கோடி பேர் பயனடைவர். கடந்தாண்டு, 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது. இ.பி.எப்., டெபாசிட்டுக்கு வட்டி அளிப்பது குறித்து, ஆண்டு துவக்கத்தில் அறிவிப்பது வழக்கம். ஆனால் இம்முறை, தாமதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|