பதிவு செய்த நாள்
26 பிப்2013
10:38
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகம் காரணமாக, விலை குறைந்து கிலோ ரூபாய் 9 க்கு விற்றது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் மணப்பாறை பகுதிகளில் மிளகாய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. விளைந்த மிளகாய் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இரண்டு நாள் நடந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக மிளகாயை பறிக்காமல் இருந்த விவசாயிகள் நேற்று முன்தினம் அதிகளவு மிளகாயை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், வரத்து பல மடங்கு அதிகரித்தது. வரத்திற்கேற்ப தேவை இல்லாததால், வியாபாரிகள் மிளகாய் வாங்க ஆர்வம் காட்டமில்லை.பாதிக்கு பாதி: இதனால் மிளகாய் விலை மிகவும் குறைந்தது. மூன்று நாட்களுக்கு முன் வரை ஒரு கிலோ மிளகாய் 18 ரூபாய்க்கு விற்றது. நேற்று விலை பாதியாக குறைந்து, 9 ரூபாய்க்கு விற்றது.வியாபாரி விஜயன் கூறுகையில், ""மணப்பாறை பகுதியில் இருந்து மிளகாய் வரத்து அதிகமாக உள்ளது, இதனால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது,'' என்றார். மற்ற காய்கள் விலை விபரம்(கிலோவிற்கு): தக்காளி ரூ.2.50 , பீன்ஸ் ரூ. 40 , மரம் முருங்கை ரூ. 9 ,பீட்ரூட் ரூ. 7.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|