தங்கம் விலை சவரனுக்கு ரூ.96  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ... ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய திட்டங்கள் ...
2013-14 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பவன்குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
12:30

புதுடில்லி: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.17 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய பன்சால், நாட்டை ஒருங்கிணைப்பதில் ரயில்வேயின் பணி மகத்தானது. நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்காற்றுகிறது என கூறினார். மத்திய அமைச்சர் பன்சால் கூறுகையில், ரயில்வேயின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதிக ரயில் கேட்டு கோரிக்கைகள் உள்ளன. 2011-12ம் ஆண்டில் ரயில்வேக்கு ரூ.22,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பாதைகள், மின்மயமாக்கல் போன்ற பணிகளில் ரயில்வே கவனம் செலுத்துகிறது. கடந்த 2012-13ம் ஆண்டில் பயணிகள் ரயில் 12,335 ஆக அதிகரித்துள்ளது. பயண கட்டணத்தை உயர்த்துவதன் மூலமே செலவினத்தை குறைக்க முடியும். 11வது ஐந்தாண்டு திட்டத்தில், இரட்டை பாதைகளாக மாற்றுவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது  12வது ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வேக்கான நிதி 5.19லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே பாதுகாப்பு நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வசதியான ரயில் பயணம் பயணிகளின் உரிமை. இழப்பு உயர்வால் ரயில்சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல. 2012-2013ம் ஆண்டில் ரயில்வேக்கான இழப்பு ரூ.24,600 கோடி ரூபாயாக இருக்கும். பாதுகாப்பான ரயில்வே பயணத்தை முக்கியமாக கருத்தில் கொண்டு ரயில்வே செயல்பட்டு வருகிறது பயணிகள் சரக்கு ரயில் கொள்கையில் பெரிய அளவில் மாற்றம் தேவை. கட்டணக்கொள்கையில், காலத்திற்கேற்ப மாற்றம் தேவை. ரயில்வேத்துறையின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து செல்கின்றன. ரயில்களில் தீத்தடுப்பு மையம் அமைக்கப்படும். வருவாய் இழப்பு அதிகரிப்பால் திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ரயில் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன. பிளாட்பாரங்களை சுத்தப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில்களில் பயோ கழிப்பறை அமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 10,700 ரயில்வே கிராசிங்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என கூறினார். டில்லி ரயில் நிலையங்களை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும்.ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உருவாக்கப்பட மாட்டாது என கூறினார்.  

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)