2013-14 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பவன்குமார்2013-14 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பவன்குமார் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72  உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ...
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
13:16

புதுடில்லி: 2013-14 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்தார். இந்த ஆண்டிற்கான முக்கிய திட்டங்கள். * குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ஓய். பைவ் வசதி செயல்படுத்தப்படும்.
* இணையதள முன்பதிவு இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு.
* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு.
* ரயில்வே ஊழியர்களுக்கு குடியிருப்பு அமைக்க ரூ.300 கோடி.
* ரேபரேலியில் ரயில்வே வார்பட தொழிற்சாலை அமைக்கப்படும்.
* ரூ.1000 கோடியில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைக்க 3800 கோடியில் திட்டம் வகுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான 47ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
* ஒடிசா, ம,பி., ராஜஸ்தானில் உள்ள ரயில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும்.             * 1.52 ரயில்வே பணியிடங்கள் நிரப்பப்படும்.
* திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் திறன் மேம்பாடு மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு படையில் பெண்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
* ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் அமைக்கப்படும்.
* . நிலுவையில் உள்ள 370 ரயில்வே திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
*சரக்கு ரயில் கட்டணம் மூலம் ரூ.93,554 கோடி திரட்டவும், பயணிகள் கட்டணம் மூலம் ரூ.42,210 கோடி திரட்ட இழக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* 2013-14ம் ஆண்டில் ரயில்வேயின் திட்ட மதிப்பு 5,363 கோடிரூபாய் ஆகும்.
* ரயில்வே சார்பில் 75 மெகாவாட் கொண்ட காற்றாலை அமைக்கப்படும்
* ரூ.3,000 கோடி கடன் வட்டியுடன் அடைக்கப்பட்டுள்ளது.
* டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பயணிகள் கட்டணம் தற்போது உயர்த்தப்படவிலைலை.                                                                 *ரயில்வே முன்பதிவு கட்டணம், தட்கல், சூப்பர் பாஸ்ட் ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.                                                                                                                                                 *சேவை கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
* நடப்பு நிதியாண்டில் 67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
* பெங்களூரு சத்தியமங்கலம் இடையிலான ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்படும். * ஸ்ரீபெரும்புதூர் கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும்
* தமிழகத்துக்கு 14 புதிய ரயில்கள் விடப்படும். என அறிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)