"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை'"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை' ... மின் கட்டணம் உயரும் மின் கட்டணம் உயரும் ...
சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:08

புதுடில்லி:வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், தானியங்கள், பருப்பு வகைகள்,கடலை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணம், 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால், முக்கிய உணவுப் பொருட்களின் விலை, மேலும் உயரும் என,தெரிகிறது
கடலை எண்ணெய்:கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, உணவு தானியம் மற்றும் பருப்பு வகைகளை, சராசரியாக, 1,307 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவினம், டன் ஒன்றுக்கு, 1,326.80 ரூபாயிலிருந்து, 1,403.60 ஆக அதிகரிக்கும்.இதே போன்று, ஒரு டன் கடலை எண்ணெய் கொண்டு செல்வதற்கான ரயில் சரக்கு கட்டணம், சராசரியாக, 1,650 கிலோ மீட்டருக்கு, 1,746.60 ரூபாயிலிருந்து, 1,848 ஆக உயரும்.மேலும், யூரியா கொண்டு செல்வதற்கான கட்டணம், 5.8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு டன் யூரியாவை, சராசரியாக, 886 கி.மீ., தூரம் கொண்டு செல்வதற்கான, சரக்கு கட்டணம், 869.60 ரூபாயிலிருந்து, 920 ரூபாயாக உயரும்.
யூரியாவிற்கான சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், இது மத்திய அரசின் உர மானியச் செலவினத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவை தவிர, டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான சரக்கு கட்டணமும், அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு டன் டீசலுக்கான சரக்கு கட்டணம், 5.79 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 984.80 ரூபாயிலிருந்து, 1,041.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, ஒரு டன் மண்ணெண்ணெய் மீதான சரக்கு கட்டணமும், 5.79 சதவீதம் உயர்த்தப்பட்டு, 886.30 ரூபாயிலிருந்து, 937.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு டன் இயற்கை எரிவாயுவிற்கான, சரக்கு கட்டணம், 5.79 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 937.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்களின், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதில், ரயில் போக்குவரத்தின் பங்களிப்பு, 32-33 சதவீதமாக உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, இவற்றின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த மாதம், டீசல் விலை உயர்த்தப்பட்டதால்,ரயில்வேக்கு, கூடுதலாக, 3,330 கோடி ரூபாய் எரிபொருள் செலவினம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் செலவினம்:இத்துடன், மின்கட்டணமும் உயர்த்தப்படுவதால், வரும் நிதியாண்டில் ரயில்வேயின் எரிபொருள் செலவினம், 5,100 கோடி ரூபாய்க்கும், அதிகமாக இருக்கும் என, அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.ரயில் சரக்கு கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது என்பது தொழில்துறையினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)