பதிவு செய்த நாள்
27 பிப்2013
09:09
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.06 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54.22 புள்ளிகள் அதிகரித்து 19069.36 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.10 புள்ளிகள் அதிகரித்து 5783.45 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் மோசமாக இருந்தது. ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பல துறைகளைச் சேர்ந்த, முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை, வீழ்ச்சி கண்டது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 1.64 சதவீதம் வீழ்ச்சி கண்டது.மேலும், இத்தாலி தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|