பதிவு செய்த நாள்
27 பிப்2013
15:41
நீண்டதூர கார் பயணங்களில் ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டி இருக்கும்போது, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டால், நாம் செட் செய்யும் வேகத்தில் கார் தானாகவே ஓடிக்கொண்டிருக்கும். நாம் ஆக்சிலேட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த முறை, 40 கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகத்திற்கு குறைவாக இயங்குவதில்லை. வண்டி க்ரூஸ் கன்ட்ரோல் மோடில் இருக்கும்போது தேவை ஏற்பட்டு ப்ரேக்கிலோ, மானுவல் ட்ரான்மிஷனில் க்ளட்சிலோ காலை வைத்தவுடன், க்ரூஸ் கன்ட்ரோல் முறை ரத்தாகிவிடும். க்ரூஸ் கன்ட்ரோல் முறையினால் நீண்ட தூர பயணங்களில் ஓட்டுனர் சற்றே ரிலாக்ஸ்டாக இருக்கலாம். மேலும் ஒரே சீரான வேகத்தை தக்க வைப்பதால், எரிபொருள் சிக்கனமும் கிடைக்கிறது. இந்த முறை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். காரின் வேகத்தை நாம் எப்படி கட்டுப்படுத்து
கிறோமோ, அதே போலத்தான் க்ரூஸ் கன்ட்ரோல் முறையும் செய்கிறது.
த்ராட்டல் பொசிஷனைக்கொண்டு, ஆக்சிலேட்டர் பெடலுக்கு பதிலாக ஆக்சிலேட்டர் த்ராட்டலை இயக்குகிறது. இதற்கு ஆக்சுலேட்டர் த்ராட்டல் வால்வுடன் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும், த்ராட்டல் வால்வு இன்ஜினுக்கு செல்லும் காற்றின் அளவை கூட்டியும் குறைத்தும் இன்ஜினின் வேகத்தையும் பவரையும்
கட்டுப்படுத்துகிறது. இந்த ஆக்சுலேட்டருக்கு த்ராட்டலை திறக்கவும் மூடவும் இன்ஜின் வேக்யூமிலிருந்து சக்தி கிடைக்கிறது.
இந்த க்ரூஸ் கன்ட்ரோலை இயக்கும் கம்ப்யூட்டர் டாஷ்போர்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும். இதனுடன் பல சென்சார்கள் இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட வேகத்தில் நாம் க்ரூஸ் கன்ட்ரோல் முறையை செட் செய்தவுடன், உடனடியாக அந்த வேகத்திற்கு சென்று பின் அதே வேகத்தை தக்க வைத்துக் கொள்ளும். காரின் எடை எவ்வளவு இருந்தாலும், சாலையில் உயரமாக ஏற வேண்டி இருந்தாலும், இதன் வேகம் மாறுவதில்லை. காருடைய வேகத்தை கட்டுப்படுத்த த்ராட்டல் பொசிஷன் மற்றும் வேகத்தை பற்றிய தகவல்களை அளிக்கும் சென்சார்களை இம்முறையில் உபயோகப்படுத்தப் படுகிறது. இப்படி நாம் செட் செய்யும் வேகத்தில் தானகாவே வண்டியை இயக்குவது கன்வென்ஷனல் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகும்.
தற்காலங்களில், 'அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்' உபயோகப்படுத்தப்படுகிறது. இதன்படி முன்னே செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தொலைவை தானாகவே இம்முறை அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளும். இதற்காக, முன்புற காட்சிகளை கண்காணிக்கும் ரேடார் ஒன்று காரின் முன்புற க்ரில்லின் பின்னே அமைக்கப்பட்டிருக்கும். முன்னே செல்லும் வண்டியின் வேகம்
குறைந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பொருள் குறுக்கே வந்தாலோ உடனடியாக என்ஜினுக்கோ, ப்ரேக்கிற்கோ சிக்னல் அனுப்பப்பட்டு வண்டியின் வேகம் குறைக்கப்படும். குறுக்கீடு விலகியபின் மீண்டும் தானாகவே நாம் செட் செய்ததற்கேற்ப வேகத்தை அதிகரித்துக் கொள்ளும். இதற்கு ராடார் ஹெட்வே சென்சார் டிஜிடல் சிக்னல் ப்ராசசர் மற்றும் லாங்கிட்யூடலை கன்ட்ரோலர் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஏதாவது ஆபத்து இருந்து ப்ரேக்கை இயக்க வெண்டிய கட்டாயம் இருப்பின் ஓட்டுனருக்கு எச்சரிக்கை சமிக்ஞையை ஒலியாகவோ, ஒளியாகவோ கொடுக்கக்கூடிய தொழில்நுட்பமும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் நீண்ட தூர பயணத்தின்போது, ஓட்டுனருக்கு ஏற்படக்கூடிய சோர்வை தடுக்கக் கூடிய வகையிலும், பாதுகாப்பு குறையாமல் வண்டியை இயக்கவும், எரிபொருள் சிக்கனம் கொடுக்கக் கூடிய வகையிலும் இயங்குகிறது. எனவே இது வரவேற்க வேண்டிய தொழில்நுட்பமாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|