பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:08
புதுடில்லி:நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற ஜனவரி, 15ம் தேதி வரையிலுமாக, உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 9,340 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இதுதவிர, கடந்த ஆண்டுகளின் நிலுவை தொகை, 488 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், பார்லிமென்டில் தெரிவித்தார்.நடப்பு பருவத்தில், சென்ற ஜனவரி 15ம் தேதி வரையிலுமாக, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, மொத்த நிலுவைத் தொகையில், உத்தர பிரதேசத்தின் பங்களிப்பு, 5,456 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதையடுத்து, கர்நாடகா (1,655 கோடி ரூபாய்), ஆந்திரா (426 கோடி ரூபாய்), தமிழகம் (390 கோடி ரூபாய்), குஜராத் (362 கோடி ரூபாய்), மகாராஷ்டிரா (308 கோடி ரூபாய்), பீகார் (275 கோடி ரூபாய்), உத்தராஞ்சல் (271 கோடி ரூபாய்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|