பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:09
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.17 கோடி டன்னாக குறைந்து உள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (3.33 கோடி டன்) விட, 4.7 சதவீதம் குறைவாகும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 0.3 சதவீதம் உயர்ந்து, 3,461 கோடி கன மீட்டர் என்ற அளவில் சற்றே அதிகரித்துள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 3,452 கோடி கன மீட்டரை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில், 14.84 கோடி டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், இதன் சுத்திகரிப்பு இலக்கையும் விஞ்சி, 15.08 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற ஜனவரி மாதத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 31.65 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (34.50 லட்சம் டன்) விட, 8.4 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|