பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:11
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), குறித்த கால டெபாசிட் திட்டங்களில், ஒரு சிலவற்றுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வங்கியின், ஒன்பது குறித்த கால டெபாசிட் திட்டங்களில், நான்கு டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி தலா, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 1 - 2 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி, 8.50 சதவீதத்திலிருந்து, 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போன்று, 2 - 3, 3 - 5 மற்றும் 5 - 10 ஆண்டுகளுக்கான, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி, 8.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், ஓராண்டு காலத்திற்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில், எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.இந்த வட்டி விகித உயர்வு வரும், மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக, இவ்வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|