பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:16
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு மற்றும் கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 2.81 லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன.
புதிய பங்கு வெளியீடு:இது, கடந்த 2011 - 12ம் முழு நிதியாண்டில், 3.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வகையில், கடந்த 2010 - 11ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2.76 லட்சம் கோடி ரூபாயாகவும், 2009 - 10ம் நிதியாண்டில், 2.61 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரட்டப்பட்ட மொத்த தொகையில், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில், பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்பட்ட, 13,050 கோடி ரூபாயும், 20 புதிய பங்கு மூலம் திரட்டப்பட்ட, 6,043 கோடி ரூபாயும் அடங்கும்.இவை, கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் முறையே, 12,857 கோடி ரூபாயாகவும், 5,904 கோடி ரூபாயாகவும் இருந்தன.
பங்கு ஒதுக்கீடு:தனிப்பட்ட பங்கு ஒதுக்கீடுகள் வாயிலாக, டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2.63 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த முழு நிதியாண்டில், 2.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|