பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:30

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன் கிழமையன்று நன்கு இருந்தது. முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துஇருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 137.27 புள்ளிகள் அதிகரித்து, 19,152.41 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,213.02 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,997.82 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, மகிந்திரா உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், கெயில், இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 35.55 புள்ளிகள் உயர்ந்து, 5,796.90 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,818.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,749.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|