பதிவு செய்த நாள்
01 மார்2013
00:44
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பார்லிமென்டில் தாக்கல் செய்தார்.
இதில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளதாகவும், இவ்வாண்டில், வெள்ளி விழா கொண்டாடும் அதற்கு கூடுதல் அதிகாரம் வழங்க உள்ளதாகவும், நிதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு, தேய்மானம் போக, 15 சதவீத முதலீட்டு சலுகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத் துறையை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சற்று அதிகரித்திருந்தது.
இருப்பினும், பங்குவர்த்தகம் முடியும் போது, இத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, 3.39 சதவீதம் சரிவடைந்தன.ஒட்டு மொத்த அளவில், மத்திய பட்ஜெட், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்ற நிலைப்பாட்டால், பங்குச் சந்தைகளில், மதியத்திற்கு பிறகான வர்த்தகம் சரிவைக் கண்டது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 1.52 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர், மரியோ டிராகி, பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுக்கு தொடந்து முன்னுரிமை அளிப்பார் என்ற காரணத்தால், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 290.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,861.54 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,322.28 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,793.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பீ.ஐ., டாடா ஸ்டீல், மாருதி உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், சன்பார்மா உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 103.85 புள்ளிகள் சரிவடைந்து, 5,693.05 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,849.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,671.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|