பதிவு செய்த நாள்
02 மார்2013
00:18
மும்பை:பொதுத் துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பீ.,), குறித்த கால டெபாசிட்டுக்களுக்கான வட்டியை, 1.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இப்புதிய வட்டி விகிதம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கோடி ரூபாய் வரை, ஆறு மாதம் முதல் ஓராண்டு வரையில் மேற் கொள்ளப்படும், டெபாசிட்டிற்கான வட்டி, 7.5 சதவீதத்தில் இருந்து, 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேசமயம், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 0.50 சதவீத கூடுதல் வட்டி விகிதம், தற்போது, 0.25 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின், மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த புதன் கிழமையன்று, குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, பல வங்கிகள், குறித்த கால டெபா சிட்டிற்கான வட்டியை உயர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|