இந்திய ரயில்வே துறைரூ.15,103 கோடி கடன் திரட்டுகிறதுஇந்திய ரயில்வே துறைரூ.15,103 கோடி கடன் திரட்டுகிறது ... இறக்குமதி வரி உயர்வுரப்பர் துறையை பாதிக்கும் இறக்குமதி வரி உயர்வுரப்பர் துறையை பாதிக்கும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கேரளாவில் கலப்பட தேங்காய் எண்ணெய்: தமிழக சரக்கு குறித்து ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2013
00:22

எர்ணாகுளம்:தமிழகத்தில் இருந்து, கலப்பட தேங்காய் எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளதாக எழுந்த புகார் குறித்து, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.அண்மைக்காலமாக, தமிழகம் மற்றும் கேரளாவில் கொப்பரை விலை சரிவடைந்து வருகிறது.
கொப்பரை:கடந்த வாரம், கேரளாவில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 65 ரூபாயில் இருந்து, 63 ரூபாயா கவும், இது, தமிழகத்தில், 63 ரூபாயில் இருந்து, 60 ரூபாய் என்ற அளவிலும் குறைந்துள்ளது.அது போன்று, கேரளாவில், ஒரு குவிண்டால் கொப்பரை விலை, 4,700 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாகவும், இது, தமிழகத்தில், 4,600 ரூபாயில் இருந்து, 4,350 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
கொப்பரை பருவம் துவங்கியுள்ளதால், விரைவில் அதன் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காசர்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கொப்பரை வரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, தொழில் துறையின் மந்தநிலையால், கொப்பரைக்கான தேவை குறைந்து, அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், புதிய வரத்து காரணமாக, அதன் விலை மேலும் சரிவடையும் என, தெரிகிறது.
பாமாயில்:இந்நிலையில், தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு வரும், தேங்காய் எண்ணெயில், எண்ணெய் பனை பருப்பில் இருந்து தயாரிக்கப்படும், பனை எண்ணெயை கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட தேங்காய் எண்ணெய் போன்று காணப்பட்டாலும், அதை விட, பனை எண்ணெயின் தரமும், விலை யும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் ஒரு கிலோ பாமாயில் விலை, 52 ரூபாயாகவும், பனை எண்ணெய் விலை, 53 ரூபாயாகவும் இருந்தது.
இதனால், தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள், தேங்காய் எண்ணெயுடன், பனை எண்ணெயை கலந்து, கேரளா விற்கு அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இதையடுத்து, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில், கலப்பட தேங்காய் எண்ணெய் குறித்து விசாரிக்க, தனி குழுக்களை, கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ளது.
இக்குழுக்கள், தமிழக தேங்காய் எண்ணெய் வகைகளின் மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஆய்வு செய்ய, தேசிய ஆய்வக அமைப்பிற்கு (என்.ஏ.பீ. டி.சி.எல்.,) அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
ஆய்வறிக்கை:தமிழகத்தில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு, 30-40 எண்ணெய் டாங்கர்களில், தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆய்வறிக்கையின் முடிவை பொறுத்து, தமிழகத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் தருவிக்கப்படும் என, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)