பதிவு செய்த நாள்
02 மார்2013
00:25
கொச்சி:நடப்பாண்டில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி, 50 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கவுதமாலாஉள்நாட்டில் ஏலக்காய் உற்பத்தியில், சரிவு நிலை காணப்படுகிறது. அதேசமயம், கவுதமாலாவில் இதன் விளைச்சல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இது, போன்ற காரணங்களால், நடப்பாண்டில், இதன் ஏற்றுமதி, 50 சதவீதம் சரிவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற, நவம்பருடன் முடிவடைந்த, எட்டு மாத காலத்தில், இந்தியாவின் ஏலக்காய் ஏற்றுமதி, 1,250 டன்னை எட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 60 சதவீதம் சரிவாகும். சென்ற 2011-12ம் ஆண்டில், முன் எப்போதும் இல்லாத அளவாக, ஏலக்காய் ஏற்றுமதி, 4,650 டன்னை எட்டியது.இந்திய ஏலக்காய்க்கு, மத்திய கிழக்கு நாடுகளில் வரவேற்பு உள்ளது. அதேசமயம், வளைகுடா நாடுகளுக்கு, கவுதமாலாவின் இரண்டாம் ரக ஏலக்காய், மலிவு விலையில், அதிகமாக ஏற்றுமதியாவதால், இந்நாடுகளுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில், இந்தியாவின் உயர் ரக ஏலக்காய் ஒரு கிலோ, 18 டாலராக உள்ளது. அதேசமயம், இதைவிட, கவுதமாலாவின் ஏலக்காய், 5 டாலர் குறைவாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். உற்பத்தி:நடப்பாண்டில், உள்நாட்டில், ஏலக்காய் உற்பத்தி, 12 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. எனினும், இது, கடந்த 2012ம் ஆண்டின் உற்பத்தி அளவான, 20 ஆயிரம் டன்னை காட்டிலும், மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|