பதிவு செய்த நாள்
02 மார்2013
00:26

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. அயல்நாட்டு முதலீட்டாளர்களின், வருமான வரி அடிப்படையிலான வசிப்பிட சான்றிதழின் தகுதிக் காலம் குறித்து, கேள்வி எழுப்பப் போவதில்லை என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.இந்த விளக்கத்தை அடுத்து, மதியத்திற்கு பிறகு, சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 56.98 புள்ளிகள் அதிகரித்து, 18,918.52 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,988.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,820.90 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 26.65 புள்ளிகள் உயர்ந்து, 5,719.70 புள்ளிகளில் நிலை பெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|