தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... உர மானிய செலவினம்ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் உர மானிய செலவினம்ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் ...
கோழிக்கறி விலை 30 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:25

புதுடில்லி:தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், கடந்த சில வாரங்களாக, நாடு தழுவிய அளவில், பிராய்லர் கோழி விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர, முட்டை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.கோழி தீவனம் தயாரிக்க பயன்படும் சோயா உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள், கடந்த ஆறு மாதங்களாக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.மொத்த விலை சந்தைஇதன் காரணமாக, தற்போது, மொத்த விற்பனையில், ஒரு டன் கோழித் தீவனத்தின் விலை, 28 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு, 20 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது என, இந்திய கோழிப் பண்ணைகள் கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) தெரிவித்துள்ளது.தீவன விலை உயர்வை அடுத்து, தற்போது, டில்லி மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ உயிர் கோழி விலை, 95 - 100 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, சில்லரை விலையில், 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது, இரண்டு வாரங்களுக்கு முன், 140 - 150 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில், குளிர் காலம் நிலவி வருவதால், விவசாயிகள், கோழிகளை பாதுகாக்கும் வகையில், பண்ணைகளில் வெப்பமூட்டும் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும், உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்துள்ளது என, பி.எப்.ஐ.,ன் அமைப்பாளர் ரிக்கி தாப்பர் தெரிவித்தார்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், சோயா ஏற்றுமதி, 6.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 4.80 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது. ஆக, நாட்டின் சோயா ஏற்றுமதி, 28 சதவீதம் அதிகரித்துள்ளது என, இந்திய சோயா பதப்படுத்துவோர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சோயாசர்வதேச அளவில், சோயாவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இதன் விலை குறைவதற்கு சாத்தியமில்லை என, பஞ்சாப் மாநிலத்தின் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.பற்றாக்குறையை போக்கி, உள்நாட்டில், கால்நடை தீவனங்கள் அதிகளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்,அண்மையில், புண்ணாக்கு இறக்குமதிக்கு, வரி விலக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது.இதற்கு முன், வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யும் புண்ணாக்கிற்கு, 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்திஉலகளவில், கோழி உற்பத்தியில் வளர்ந்து வரும் முன்னணி நாடுகளுள் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, சர்வதேச அளவில், நம் நாடு, பிராய்லர் உற்பத்தியில், ஐந்தாவது இடத்திலும், முட்டை உற்பத்தியில், நான்காவது இடத்திலும் உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய கோழிப் பண்ணை துறை, ஆண்டுக்கு, 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வருகிறது.வர்த்தக வாய்ப்புகள்மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரித்து வருவதுடன், உணவு பழக்க வழக்கங்களில் மாறுதலும் ஏற்பட்டு வருகிறது.இவைதவிர, வேகமான நகர்மயமாதல் போன்றவற்றாலும், பெரிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக வாய்ப்புகள் கொண்ட துறையாக, இந்திய கோழிப் பண்ணை துறை உருவெடுத்து வருகிறது.

முட்டை விலை 25 காசு சரிவு:தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 360 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு தினங்களில் முட்டை விலை, 25 காசு குறைந்தது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 375 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 15 காசு சரிந்து, 360 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த மாதம், 28ம் தேதி, முட்டை விலை, 385 காசாக இருந்தது. மறுநாள், 10 காசு குறைத்து, 375 காசாக நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து, 2ம் தேதி, மீண்டும், 15 காசு குறைத்து, முட்டை விலை, 360 காசாக நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, இரு தினங்களில், முட்டை விலை, 25 காசு குறைந்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)