அலைபேசி விற்பனை16 சதவீதம் அதிகரிப்புஅலைபேசி விற்பனை16 சதவீதம் அதிகரிப்பு ... மலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை மலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 32 லட்சம் முதலீட்டாளர்கள் விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2013
00:10

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்களின், பல்வேறு திட்டங்களில் இருந்து, 32 லட்சம் முதலீட்டாளர்கள் விலகியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்து உள்ளது.
முதலீடு:மொத்த பரஸ்பர நிதி திட்டங்களில், பங்குச் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து தான், அதிக அளவில், முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த, 2011-12ம் நிதியாண்டின், ஜனவரி மாதம் வரையிலுமாக, 4.64 கோடி முதலீட்டாளர்கள் பல்வேறு, பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களில், முதலீடு செய்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை, நடப்பு ஆண்டு, ஜனவரி மாத இறுதியில், 4.32 கோடியாக சரிவடைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு காலத்தில், 32 லட்சம் முதலீட்டாளர்கள் அல்லது பரஸ்பர நிதி கணக்குகள் சரிவுஅடைந்துள்ளன."செபி' அமைப்பின் புள்ளி விவரத்தின் படி, தற்போது, நாட்டில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின், பல்வேறு திட்டங்களில், ஒரு முதலீட்டாளர், ஒரு திட்டம் அல்லது பல்வேறு திட்டங்களில், முதலீடு மேற்கொண்டுள்ளனர்.
கணக்கீட்டு காலத்தில், மிக அதிகபட்சமாக, பங்குச் சார்ந்த முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை, 3.76 கோடியில் இருந்து, 3.36 கோடியாக சரிவடைந்துள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் திட்டங்களில், பங்குச் சார்ந்த முதலீட்டு திட்டங்களின் பங்களிப்பு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் எட்டு மாதங்களில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில் இருந்து தான், மிக அதிக அளவில் தொகை வெளியேறியுள்ளது. குறிப்பாக, சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், 2,501 கோடி ரூபாய், விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
"சென்செக்ஸ்':இதுகுறித்து, சந்தை பங்கேற்பாளர் ஒருவர்கூறியதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி, லாப நோக்கம் கருதி, பல பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோன்று, ஜனவரி வரையிலான காலத்தில், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டு திட்டங்களில் இருந்தும், 1.11 லட்சம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதையடுத்து, இத்திட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 26.07 லட்சமாக உள்ளது. இருப்பினும், கணக்கீட்டு காலத்தில்,வருவாய் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டு திட்டங்களில், 8.11 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர். இதையடுத்து, இத்திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 60.61 லட்சமாக உயர்ந்துள்ளது.
புள்ளிவிவரம்:பரஸ்பர நிதி நிறுவனங்களின், "எக்சேஞ்ச் டிரேடடு பண்ட்ஸ்' எனப்படும், திட்டங்களில், புதிதாக, 1.09 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். இதன் பிறகு, இத்திட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 7.32 லட்சமாக உயர்ந்துள்ளது என, "செபி' அமைப்பின், புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)