அலைபேசி விற்பனை16 சதவீதம் அதிகரிப்புஅலைபேசி விற்பனை16 சதவீதம் அதிகரிப்பு ... தாவர எண்ணெய் இறக்குமதி 1.09 கோடி டன்னாக உயரும் தாவர எண்ணெய் இறக்குமதி 1.09 கோடி டன்னாக உயரும் ...
மலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2013
00:12

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து, மலிவு விலை ஏலக்காய் வருவதை தடுக்க, அதற்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கவுதமாலா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, விலை குறைந்த ஏலக்காய், அதிக அளவில்இறக்குமதியாகி வருகிறது.இத்துடன், வெளிநாடுகளில் இருந்து, சட்டத்திற்கு புறம்பான வகையில் ஏலக்காய் கடத்தி வரப்படுகிறது. இதனால், உள்நாட்டில் இதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, ஏலக்காய் கடத்தலை தடுக்கவும், மலிவு விலையில் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதே சமயம், ஏலக்காய் விலை, குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒன்றும் குறையவில்லை என, நறுமணப் பொருள்கள் வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்ற ஆண்டு, பிற்பகுதியில் இருந்து தான், ஏலக்காய் இறக்குமதி சூடுபிடித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், ஏலக்காய் இறக்குமதி, 200 டன் என்ற அளவிற்கே உள்ளது. ஏல மையங்களில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, சராசரியாக, 696 - 787 ரூபாய் என்ற அளவிற்கே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதாக, வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மலிவு விலை ஏலக்காய் வரத்தை குறைக்க, அதற்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிப்பது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், மலிவு விலை ஏலக்காய் வரத்து கட்டுப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் அதன் விலை, நிலையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)