மலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனைமலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை ... தாவர எண்ணெய் இறக்குமதி 1.09 கோடி டன்னாக உயரும் தாவர எண்ணெய் இறக்குமதி 1.09 கோடி டன்னாக உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2013
00:13

புதுடில்லி:கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடம் இருந்து, கோதுமையை கொள்முதல் செய்கின்றன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கோதுமை, அரசின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
கையிருப்பு:சென்ற பிப்ரவரி, 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் கிடங்குகளில், 3.08 கோடி டன் கோதுமை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் இருந்து, நடப்பு பருவத்திற்கான கோதுமை அறுவடை துவங்க உள்ளது. இதனால், அரசின் கிடங்குகளில், கோதுமை கையிருப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தேவையை விட, கோதுமை கையிருப்பு அதிகம் உள்ளதால், மத்திய அரசு, 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது.
இதுவரை, ஒரு டன் கோதுமை, 295-330 டாலர் என்ற விலையில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.சென்ற வேளாண் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, முன் எப்போதும் இல்லாத, சாதனை அளவாக, 9.48 கோடி டன்னை எட்டியது. இதன் உற்பத்தி, நடப்பு பருவத்தில், 9.23 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள உபரி கையிருப்பு மற்றும் புதிய வரத்து போன்ற காரணங்களால், கிடங்குகளில் கோதுமையை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொள்முதல்:இதை கருத்தில் கொண்டு, கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.மத்திய அரசு, வரும் 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஏப்.,-மார்ச்), 4.40 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)