பதிவு செய்த நாள்
08 மார்2013
00:21

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களை கருத்தில் கொண்டு, சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 0.84 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், மந்தமாகவே நடைபெற்றது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொதுத் துறை, நுகர்வோர் சாதனங்கள், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 160.93 புள்ளிகள் அதிகரித்து, 19,413.54 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,465.52 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,212.92 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், டி.சி.எஸ்., எல் அண்டு டி உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஜிந்தால் ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலிவர், கோல் இந்தியா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 44.70 புள்ளிகள் உயர்ந்து, 5,863.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,878 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,801.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|