பதிவு செய்த நாள்
09 மார்2013
03:53
புதுடில்லி : நடப்பாண்டு, பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு வந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 6.88 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் வந்த பயணிகள் எண்ணிக்கையை (6.77 லட்சம் பேர்) விட, 1.6 சதவீதம் அதிகம் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த, அன்னிய செலாவணி வருவாய், 19.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,502 கோடியில் இருந்து, 10,186 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், இந்தியா வந்த, 6.28 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த, அன்னியச் செலாவணி வருவாய், 7,653 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு, ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான, இரண்டு மாத காலத்தில், இந்தியா வந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 13.87 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டின், இதே காலத்தில், 13.59 லட்சமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|