பதிவு செய்த நாள்
09 மார்2013
04:00
புதுடில்லி : பொதுத் துறை நிறுவன மான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் (ஆர்.சி.எப்.,), கோரிக்கை அடிப்படையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
விண்ணப்பங்கள் இப்பங்கு வெளியீடு வாயிலாக, 6.90 கோடி பங்குகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றை, 45.02 ரூபாய் என்ற விலையில் வாங்கும் வகையில், 8.89 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. ஆக, இப்பங்கு வெளியீடு வாயிலாக, 310 கோடி ரூபாய் கிடைக்கும். இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 92.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது. இதில், 12.5 சதவீத பங்குகள், விற்பனை செய்யப்பட்டுள்ளன.
"செயில்' மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ), ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) ஆகிய, இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும், இம்மாதத்தில், மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, முதலில் இலக்கு நிர்ணயித்தது. இது, தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, அரசுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 21,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|