பதிவு செய்த நாள்
09 மார்2013
04:02
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மிகவும் சாதகமாக இருந்ததால், மதியத்திற்கு பிறகு வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 1.39 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி, நான்காவது காலாண்டில் சிறப்பாக மேம்பட்டுள்ளது; அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், எண்ணெய், எரிவாயு மற்றும் நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப் பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 269.69 புள்ளிகள் அதிகரித்து, 19,683.23 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 19,706.03 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 9,477.61 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி, இன்போசிஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., ஆகிய, ஐந்து நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய, 25 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 82.40 புள்ளிகள் உயர்ந்து, 5,945.70 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,952.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,883 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|