பதிவு செய்த நாள்
09 மார்2013
04:05
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 4,200 கோடி டாலர் (2.31 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்து உள்ளது என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.
பயன்பாடு இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், தங்கம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளாக, தங்கம் இறக்குமதியும் உயர்ந்து உள்ளது. கடந்த, 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 5,630 கோடி டாலர் (3.09 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. சென்ற, 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில், தங்கம் இறக்குமதி முறையே, 4,050 கோடி டாலர் (2.22 லட்சம் கோடி ரூபாய்) மற்றும் 2,860 கோடி டாலர் (1.57 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு இருந்தது.
தங்கம் இறக்குமதி உயர்ந்து வருவது, நாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. இதனால், நடப்பு நிதிஆண்டின், செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையின் பங்களிப்பு, 5.4 சதவீதத்தை எட்டியுள்ளது. இதே காலத்தில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 36,500 கோடி டாலர் (20.07 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், சுங்க வரியை உயர்த்தியுள்ளது. தங்கத்திற்கு மாற்றான முதலீட்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
வங்கிகள்உள்நாட்டில், குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் எம்.எம்.டி.சி., நிறுவனம் வாயிலாக, தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.சென்ற நிதியாண்டில், நாட்டின் மொத்த தங்கம் இறக்குமதியில், குறிப்பிட்ட வங்கிகளின் பங்களிப்பு, 603 டன் அல்லது 56 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|