நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும்நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் ... பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் திறப்பு பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் திறப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விற்பனை வீழ்ச்சியை கட்டுப்படுத்த...சலுகைகளை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
04:08

புதுடில்லி : கார் விற்பனை சரிவடைந்து வருவதை தடுக்க, பல நிறுவனங்கள், கவர்ச்சிகரமான சலுகைகளை வாரி வழங்கத் துவங்கியுள்ளன.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், இந்திய தொழில் துறை வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது.சலுகைகள் இதன் தாக்கத்தால், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கார் விற்பனை, நடப்பு நிதியாண்டில், சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிலும், ஏராளமான கார்கள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன.
இம்மாதத்துடன், நடப்பு நிதிஆண்டு முடிவடைய உள்ளதால், பல நிறுவனங்கள், அதிரடி சலுகைகள் மூலம், தேங்கியுள்ள கார்களை விற்பனை செய்து வருகின்றன.இந்த வகையில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் அனைத்து மாடல் கார்களுக்கும் சலுகைகளை வழங்கி வருகிறது. சென்ற பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 70 சதவீதம் குறைந்து, 10,613 ஆக சரிவடைந்து உள்ளது.
இதையடுத்து இந்நிறுவனம், புதுமையான முறையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டு மூலம், நானே கார் வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒருவர், கிரெடிட் கார்டு வாயிலாக, 1 லட்ச ரூபாய்க்கு மாதம், 8,333 ரூபாய் வீதம், வட்டி இன்றி, நானோ கார் கடனை, 12 மாத தவணையில் அடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாட்டா மோட்டார்ஸ், அதன் மான்ஸா கார் விற்பனையிலும் புதுமையை புகுத்தி உள்ளது. அதாவது, ஒருவர் வாங்கும் மான்ஸா காரை, மூன்று ஆண்டுகளுக்குப் பின், திரும்பவும் விற்க எண்ணிணால், வாங்கிய விலையில், 60 சதவீத தொகை திரும்ப தரப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.மான்ஸா கார் மேலும், மான்ஸா மற்றும் இன்டிகா கார்களின் விலையும், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று, ஸ்கோடா நிறுவனமும் அதன் ரேபிட் சொகுசு கார்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. குஜராத்தில், இந்நிறுவனத்தின் முகவராக செயல்படும் ஒரு நிறுவனம், ரேபிட் கார் வாங்குவோருக்கு, ஐந்தாண்டுகள் கழித்து, இலவசமாக பேபியா கார் வழங்கப்படும் என, அறிவித்து உள்ளது.
குறைந்த வட்டி வோக்ஸ்வேகன் நிறுவனம், 1 ரூபாய் கொடுத்து, பழைய காருக்கு பதிலாக, புதிய வென்டோ காரை ஓட்டிச் செல்லுங்கள் என, கூறுகிறது. எஞ்சிய தொகையை, ஓராண்டு கழித்து மொத்தமாகவோ அல்லது, 36 மாத தவணையிலோ செலுத்தலாம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம், அதன் பிரையோ மற்றும் சிட்டி கார்களை வாங்குவோருக்கு, 0.01 சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டியில், கடன் வசதி செய்து தருகிறது.மாருதி சுசூகி நிறுவனம், அதன் கார்களின் தேக்கத்தை குறைக்க, கூர்கான் தொழிற்சாலையை இன்று ஒரு நாள் மூட உள்ளதாகவும், அதே சமயம், மானேசர் தொழிற்சாலை, வழக்கம் போல் இயங்கும் என, தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் அதன் ஸ்விப்ட் உள்ளிட்ட பல மாடல் கார்களுக்கும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.அடுக்கு மாடி குடியிருப்புநடுத்தர மக்களின் கார் என்று அழைக்கப்படும், இதன் ஆல்டோ 800 கார் வாங்குவோருக்கு, மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒருவர், 1,399 ரூபாய் மட்டும் செலுத்தி, சுற்றுலா சென்று வரலாம்.
ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினால், கூடவே ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் காரையும் இலவசமாக பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆன்-லைன் வாயிலான பரிசுப் புள்ளிகள் மூலம் கார் வாங்கி, அக்கடனை, தவணையில் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது.இது போன்று, மேலும் பல நிறுவனங்கள், புதிய உத்திகள் மூலம், கார் விற்பனையை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)