பதிவு செய்த நாள்
09 மார்2013
09:15
பொள்ளாச்சி:வெளி மார்க்கெட்டில், கொப்பரை விலையில், மாற்றமின்றி சீரான விலை நிலவுவதால், நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏலத்தில், முதல்தர கொப்பரை கிலோ 42.10 வரை ஏலம் போனது.பொள்ளாச்சி அடுத்த நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இந்தவாரம் நடந்த கொப்பரை ஏலத்தில், நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் ஏலத்துக்கு கொப்பரையை கொண்டு வந்தனர். இதில், 15 விவசாயிகள் 64 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர்.
ஏலத்தில், ஐந்து வியாபாரிகள் பங்கேற்று ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சென்னியப்பன் ஏலம் நடத்தினார்.முதல் தர கொப்பரை 46 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 40.10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 42.10 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை 18 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 34.10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 36.70 ரூபாய் வரை விலை கிடைத்தது.
அதிகாரிகள் கூறியதாவது:
வெளி மார்க்கெட்டில், கொப்பரைக்கான தேவை குறைந்துள்ளதால், இரு வாரங்களாக பெரிய மாற்றம் இன்றி உள்ளது. விவசாயிகள் இருப்பு வைத்த கொப்பரையை, விற்பனை செய்து வருகின்றனர். இதனால், கடந்த வாரத்தை விட இந்தவாரம் ஏலத்துக்கு, இரண்டு மூட்டை கொப்பரை அதிகரித்துள்ளது. வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ 43 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஏலத்துக்கு, வரத்து அதிகரிப்பிருப்பினும், விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இந்த வாரம் முதல் தர கொப்பரை குறைந்த பட்ச விலையில் 1.7 ரூபாயும், அதிகபட்ச விலையில், 2.6 ரூபாய் உயர்ந்திருந்தது. இரண்டாம் தர கொப்பரைக்கு குறைந்தபட்ச விலையில், 50 பைசா சரிந்திருந்தது. அதிகபட்ச விலையில், 95 பைசாவும் உயர்ந்திருந்தது. தற்போது, கொப்பரை விலை உயரத்துவங்கியுள்ளதால், விவசாயிகள் மீண்டும் கொப்பரை உற்பத்தியை துவங்கியுள்ளனர். அடுத்த வாரம் நடக்கும் ஏலத்துக்கு வரத்து அதிகரித்தால், விலையில் மாற்றம் ஏற்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|