பதிவு செய்த நாள்
09 மார்2013
10:49
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக கடந்த மூன்று தினங்களாக மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது. அசைவ பிரியர்கள் மிகுந்த குஷியில் மீன்களை வாங்கி செல்கின்றனர். ராமேஸ்வரம், மண்டபம், கீழக்கரை பகுதிகளில் மீன் விலை அதிகரித்திருந்த நிலையில், மூன்று நாட்களாக விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்ற இறால் நேற்று 160 ரூபாய், 400க்கு விற்ற சீலா 320, 200க்கு விற்ற விளமீன் 130, 220க்கு விற்ற ஊலா 170, 140க்கு விற்ற கிழங்கன் 80, 240க்கு விற்ற பாறை 180, 250க்கு விற்ற நண்டு 160, 20க்கு விற்ற சூட 15, 200க்கு விற்ற கணவாய் 170 ரூபாய்க்கு விற்கிறது.
மீன் வியாபாரி சதக்கத்துல்லா கூறியதாவது: கடந்த மாதம் காற்று பலமாக வீசியதால், மீன் பாடு குறைவாக இருந்தது. சில நாட்களாக பெய்த மழையால், மீன்கள் நல்ல தண்ணீர் குடிப்பதற்காக மேல்நோக்கி வருவதால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் போன்ற அனைத்து பகுதிகளிலும் மீன்பாடு அதிகமாக இருக்கிறது. மீன்வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது. மேலும், குறைய வாய்ப்புள்ளது. முத்துப்பேட்டை பகுதியில் கிளி மீன் ஏராளமாக கிடைப்பதால், டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|